புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கொன்னக்காடு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். நேற்று கோவிலுக்கு வந்த அவர்கள், பின்னர் தங்கள் ஊருக்கு திரும்பிச்செல்ல, 2 வேன்கள் வரவழைத்துள்ளனர். அந்த வேன்களில் ஏறி ஊருக்கு செல்லும் வழியில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு இறங்கியுள்ளனர்.
அப்போது வேனில் இருந்து பழனியப்பன்-கவுசல்யா தம்பதியின் மகள் தன்ஷிகா(வயது 3) இறங்கி ஓட்டல் வளாகத்தில் இருந்த விளையாட்டு பூங்காவிற்கு சென்றுள்ளார். இதை யாரும் கவனிக்காத நிலையில், அனைவரும் வேன்களில் ஏறி தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் சிறுமி தனியாக இருந்ததை பார்த்த ஓட்டல் பணியாளர்கள், ேகாட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு சென்று, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். இதையடுத்து அதில் பதிவாகியிருந்த வேனின் பதிவெண்ணை கொண்டு அதன் உரிமையாளரின் முகவரியை பெற்றதோடு, அந்த வேன் செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், கீரனூர் சுங்கச்சாவடி அருகே சென்ற வேன்களை, அங்கிருந்த போலீசார் நிறுத்தி தகவல் தெரிவித்தனர். அப்போது சிறுமியின் பெற்றோர் தங்கள் வேனுக்கு பின்னால் வரும் மற்றொரு வேனில் தங்கள் குழந்தை வருவதாக நினைத்துக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு வந்தனர். அவர்களிடம் சிறுமியை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.