ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் (மே) நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 30 தேர்வு மையங்களும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களும் என 91 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 21 ஆயிரத்து 17 மாணவ, மாணவிகளும், பிளஸ்-2 தேர்வினை 19 ஆயிரத்து 332 மாணவ, மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 23 ஆயிரத்து 298 மாணவ, மாணவிகளும் எழுத உள்ளனர்.
அரசு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்தும் வகையில் தேர்வு மையங்கள், வினாத்தாள் மையங்கள், விடைத்தாள் மையங்கள் போன்ற இடங்களில் போதுமான காவலர்களை பணியில் அமர்த்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சிறப்பு பஸ்கள்
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் பணி மேற்கொள்ள வேண்டும். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். மேலும், தேர்வுகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படையினர், கண்காணிப்பு அலுவலா்களை கொண்டு தேர்வு மையங்களில் சோதனை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வினை மாணவ, மாணவிகள் சிறப்பாக எழுதும் வகையில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளை 62 ஆயிரத்து 647 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.