புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் நகராட்சி கட்டிடங்களில் வாடகை வரி செலுத்தப்படாமல் நிலுவை தொகை வைத்திருப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சீல் வைப்பது மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சி வருவாய் அலுவலர் விஜயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள், புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடை முன்பு குத்தகை பாக்கியை உடனே செலுத்த வலியுறுத்தி பதாகை வைத்ததோடு 10 நாட்களுக்குள் குத்தகை பாக்கி செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் ஒரு வணிக வளாகம், வணிக கட்டிடத்திற்கு உடனடியாக சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்தனர். மொத்தம் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை பலகையை வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.