மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், கீழமஞ்சக்குடி, வெட்டிவயல், மின்னாமொழி, இடையாத்திமங்கலம், காரக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கதிஜா அம்மாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாலசுந்தரம் கலந்து கொண்டார். கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி 2021-2022 திட்டத்தின் கீழ் கிராம வளர்ச்சி பணிகள் தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட பணிகள் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) கணேசன் வரவேற்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.