தமிழக சட்டசபையில் நேற்று மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-“புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின்” கீழ் ரூ.1,018.85 கோடி மதிப்பீட்டில் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர், திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம்-காரையூர் மற்றும் புதுநகர், சிவகங்கை மாவட்டம்-பூவந்தி, விருதுநகர் மாவட்டம்-தாயில்பட்டி மற்றும் ஜமீன் கொல்லன்கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம்-மங்களம், தூத்துக்குடி மாவட்டம்-புதுக்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டம்-செங்கோட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ரத்த சேமிப்பு அலகு நிறுவப்படும்.அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், மதுரை, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பள்ளி சுகாதார தூதுவர்களாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள், ரூ.6.47 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.