கோபாலப்பட்டிணத்தில் இரண்டாவது நாளாக வெளுத்து வாங்கிய கோடை மழை





கோபாலப்பட்டிணத்தில் இரண்டாவது நாளாக மழை கொட்டி தீர்த்தது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், பலத்த மழையும் பெய்து வருகின்றது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. தினமும் சராசரியாக 98 டிகிரி அளவில் உள்ளது. ஒரு சில நாட்களில் 100 டிகிரியை தொட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி, நுங்கு மற்றும் பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர்.

மேலும் இளநீர், பழச்சாறுகளையும் குடித்து வருகின்றனர். வெள்ளரி பிஞ்சுகள் உள்பட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு பழக்க வழக்கங்களை கையாள தொடங்கி உள்ளனர்.அதேநேரத்தில் வெயிலில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது வெப்பத்தில் இருந்து தப்பிக்க குடைகளை பிடித்தப்படியும் செல்வதை காணமுடிகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று பகலில் மேகமூடமாகவும் அவ்வப்போது தூரல் மழை பெய்தது.இரவு 10.30 மணிக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை 12 மணி வரை நீடித்தது.திடீர் மழையினால் மின்வெட்டும் ஏற்பட்டது. பிறகு 1 மணியளவில் மின்சாரம் வந்தது.

திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை வெயில் உக்கிரம் குறைந்து சிறிது குளிர்ச்சியை ஏற்படுத்தியது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments