கோபாலப்பட்டிணத்தில் இடி, மின்னல் தாக்கியதில் மின்மாற்றி பழுதானதால் மின்சாரம் விட்டு விட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு மின்னல் தாக்கியதில் காட்டுக்குளம் பள்ளிவாசல் மினாரா சேதமடைந்தது. மேலும் அருகில் இருந்த வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசலில் உள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து GPM மீடியா சார்பாக கொடிக்குளம் AE அவர்களிடம் கேட்டபோது
நேற்று இடி, மின்னல் தாக்கியதில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் மூன்று டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தது. ஆகவே கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகம் சீராக கிடைக்க ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று இரவு அல்லது நாளை காலை சீராக மின்சாரம் கிடைக்கும் என தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.