திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று நள்ளிரவு 1.45 மணிக்கு திருச்சியில் இருந்து துபாய் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 120 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த விமானம் புறப்படும் நேரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.