புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் நடத்தி, வணிகா் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தை நடத்தினா்.
கீரனூா் ரயில் நிலையம் திருச்சிக்கும், புதுக்கோட்டைக்கும் இடையில் மிக முக்கியமான பகுதிக்கான ரயில் நிலையமாக உள்ளது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிற்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா்.
கீரனூா் ரயில் நிலையத்தில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்லக் கோரி இப்பகுதியில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை பொதுமக்கள் சுமாா் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்களுக்கு பந்தல் போடுவதைப் போல பந்தல் போட்டு, மேசை நாற்காலிகள் போட்டு வாழை இலையில் இந்த அன்னதானம் பரிமாறப்பட்டது. இதுபோன்ற தொடா் நூதனப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வணிகா் சங்கத்தினா் கூறினா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.