கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் கோடை வெயில் & ரமலான் காலத்தை முன்னிட்டு பந்தல் அமைக்க வேண்டும் - GPM மீடியா கோரிக்கை






கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் கோடை வெயில் & ரமலான் நோன்பு வருவதால் பயனாளிகள் நிழல் பெரும் வகையில் பந்தல் அமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு GPM மீடியா கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பெரிய பள்ளிவாசல் மற்றும் காட்டுக்குளம் பள்ளிவாசல் பகுதியில் ரேஷன் கடைகள்  செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது. இங்கு மாத மாதம் மக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

கோடை வெயில் மற்றும் நோன்பு காலம்

கோடை காலத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தாண்டும் கோடை வெயில் வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. தற்போது ரமலான் நோன்பு தொடங்கி உள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் பந்தல் அமைக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் GPM மீடியா சார்பாக  கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு மற்றும் வெயில் காரணமாக கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments