கோபாலப்பட்டிணம் மையவாடியில் உயர் கோபுர மின் விளக்கு






கோபாலப்பட்டிணம் மையவாடியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் மையவாடியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் நிதியிலிருந்து சுமார் 7.0 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 05.12.2021 உயர் கோபுர மின் விளக்கு அமைக்க கோபாலப்பட்டிணம் மையவாடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

ரூ.7.0 இலட்சம் செலவில், உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணியை, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் வேலை துவங்கி நடைபெற்று வந்தது. அதன்படி,   உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்தும் பணி நேற்று முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

கோபாலப்பட்டிணத்திற்கு உயர் கோபுர மின் விளக்கு கொண்டு வர முயற்சி எடுத்த அனைத்து உள்ளங்களுக்கு GPM மீடியா சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

கோபாலப்பட்டிணத்தில் ஈத்கா மைதானத்தில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகல் நேரத்தில் உயர் கோபுர மின் விளக்கின் புகைப்படங்கள்
















இரவு நேரத்தில் உயர் கோபுர மின் விளக்கின் புகைப்படங்கள்












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments