தமிழகத்தில் பிறை தென்படாததால்‌03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று பெருநாள். தலைமை ஹாஜி & தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.






தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்





தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 1/5/2022 இன்று மாலை ஹிஜ்ரி 1443 ஷவ்வால் பிறை தென்படாததால் 3/5/2022 செவ்வாய்க்கிழமை அன்று ஷவ்வால் பிறை 1 ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிவிப்பில்




தமிழகத்தில் ஷவ்வால் மாதம் பற்றிய அறிவிப்பு.

பிறை தேட வேண்டிய நாளான  01.05.2022  ஞாயிற்றுக்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 02.05.2022 திங்கள்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்

 வரும் 03.05.2022  செவ்வாய் கிழமை நோன்புப் பெருநாள் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments