இன்று (07.05.2022) புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மாநில தலைவர் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மரக்கன்று நட்டு பின்பு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தை மாவட்ட பொதுச்செயலாளர் S.A.M.அரபாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாவட்ட துணை தலைவர் P.M.S.குலாம் முகமது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
தொடர்ந்து மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சேர்ந்த பலர் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் முன்னிலையில் தங்களை SDPI கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இவன்,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.