புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்களை பயனாளிகளாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு நிலத்தினை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டார். பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமினை அவர் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கவிதாராமு தெரிவிக்கையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களில் வேளாண்மை செய்யும் வகையிலும், தரிசு நில உற்பத்தித் திறனை மேம்படுத்திடும் வகையிலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ், தரிசு நில தொகுப்புகளை உருவாக்குதல், தரிசு நில தொகுப்பு நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு, சூரிய ஒளி பம்பு செட் அமைத்தல், தனிநபர் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், தனிநபருக்கு பண்ணை குட்டை அமைத்தல், சிறுபாசனக் குளம், குட்டை, வரத்துவாரியை தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது’’ என்றார். அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு ரூ.2,63,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.