புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சின்னான் கோன்விடுதியில் சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டின் பின் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு ஆண் குழந்தையின் பிணம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 5 நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது. குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஜெயமணி, வருவாய் ஆய்வாளர் ரவிகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரெகுநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருக்கு பிறந்தது? எப்படி இறந்தது?, தவறான வழியில் பிறந்த குழந்தை என்பதால் கொன்று போட்டு சென்றார்களா? குழந்தையின் உடலில் இருக்கும் காயங்கள் நாய் கடித்ததால் ஏற்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.