அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் ராஜ். இவர் அப்பகுதியில் திறந்த வெளியில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதனை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இந்த குவித்து வைத்து இருந்த பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்க்கு தீ பரவியது. இதனால் அறந்தாங்கி பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையறிந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அறந்தாங்கி டேவிதர் சாலையில் ரவி என்பவது வீட்டிற்கு பின்னால் இருந்த கோரை செடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.