புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-2 மற்றும் தொகுதி 2 ஏ) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு வருகிற 21-ந் தேதி முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை கோட்டத்தில் 52 மையங்களில் 15 ஆயிரத்து 717 தேர்வர்களும், அறந்தாங்கி கோட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 231 தேர்வர்களும், இலுப்பூர் கோட்டத்தில் 7 தேர்வு மையங்களில் ஆயிரத்து 670 தேர்வர்களும் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 618 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களிலும் சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், மின்வசதி, புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் பஸ் நிலையத்திலிருந்து தேர்வுக் கூடங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பறக்கும்படை
ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 11 பறக்கும்படை குழுக்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் செல்போன், கால்குலேட்டர், மின்னணு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும், தேர்வு எழுதுவோர் தேர்வு நாளன்று முககவசம் அணிந்து வரவேண்டுமென்றும், மேலும் தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தேர்வாளர்கள் அனைவரும் தேர்வு கூடத்திற்கு வரவேண்டும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.