புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் உலக சுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மோகனசுந்தரம், யுவராஜா, ராஜ்குமார், குமார் ராஜா ஆகிய 4 பேரும் பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்திலிருந்து நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் சுமார் பத்து நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மீனவர்களும் மீன் பிடித்து விட்டு காலை 11 மணி அளவில் கரைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு திரும்ப வில்லை.
இதனால் அவரது உறவினர்கள் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் 4 பேரையும் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த படகில் சென்ற 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னகரம் கிராமத்தில் இருந்து நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 பேர் கரை திரும்பாததால் பொன்னகரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.