அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பில் பணம் வைத்து 15 பேர் சூதாடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அடைக்கலம் (வயது 60), சேக் இஸ்மாயில் (45), ஜெயினூல் அன்சாரி (40), காளிதாஸ் (33), அன்வர்தீன் (36), வெங்கடேசன் (42), கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல் ஹமீது (63), ரவீஸ் (42), நைனா முகமது (45), செந்தில்வேல் (44), மகாதீர் முகமது (38), விக்னேஷ் (39) கமால் பாஷா (61), பழனிவேல் (47), நிஜாமுதீன் (35) ஆகிய 15 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பணம் பறிமுதல் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 15 பேர் மீதும் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.