உப்பு ஏற்றுமதி
திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரை வரை மீட்டர்கேஜ் ரெயில்பாதை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து வந்தது. இதில் பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து அகஸ்தியன்பள்ளி வரை ரெயில் இயக்கப்பட்டது.
அகஸ்தியன்பள்ளியில் இருந்து உப்பு பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் சவுக்கு கட்டைகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பட்டு வந்தது. இதனால் ரெயில்வே துறைக்கு அதிக அளவில் வருவாய் கிடைத்தது.
அகல ரெயில் பாதை அமைக்கும் பணி
இந்த வழித்தடத்தில் இருந்த மீட்டர்கேஜ் பாதையை அகற்றி விட்டு அகல ரெயில்பாதை அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது வந்தது.
இந்த நிலையில் தற்போது அகல ரெயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டி-கரியாப்பட்டினம் வரை அகல ரெயில்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து, தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் கொட்டும் பணி நடக்கிறது.
ஜல்லி கற்கள் கொட்டப்படுகிறது
இதற்காக சரக்கு ரெயிலில் ஜல்லி கற்கள் ஏற்றி வைத்து தண்டவாளத்தில் கொட்டப்படுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வந்தால் வருகிற ஆகஸ்டு மாதத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.