புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தளவாயாக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் புதிதாக G.O (Ms) No. 196-ன்படி ஒப்பளிக்கப்பட்ட 30 பணியிடங்களுக்கு, கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்களில் இணைந்து பணிபுரிய மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் மற்றும் திருப்புனவாசல் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்கண்ட தகுதியுடையவர்கள் கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் 24.05.2022-ம் தேதி தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது
தகுதிகள் :
1. பத்தாம் வகுப்பு (Pass or Fail)
2. வயது (20 முதல் 45 வரை )
3. உடற்தகுதிகள் - (காவல் துறையை போன்றது)
4.குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ, சாதி ரீதியிலான அமைப்புகளிலோ சம்மந்தப்பட்டவர்களாக இருக்க கூடாது.
மேற்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். மாத ஊதியம் எதுவும் இல்லை. பணிநாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.