கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:
வலைகளை சீரமைக்கும் பணிகள் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த தடை காலம் 61 நாட்கள் நீடிக்கும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையேற்றி சிறு, சிறு பழுதுகளை சரி செய்யும் பணியிலும் மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் வலைகளை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக வெறிச்சோடி காணப்பட்டன மீன்பிடி தளங்கள் தற்போது கூட்டம் அதிகமாக காணப்பட்டு களைகட்ட தொடங்கியுள்ளது.
நிவாரண தொகை வழங்க வேண்டும் மீன்பிடி தடைக்காலத்தில் தமிழக அரசு சார்பாக மீனவர்கள் தடைக்கால நிவாரண தொகையாக வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தப்படும். ஆனால் தற்போது வரை மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை அதனை அரசு உடனே வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி தருவதாக அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போல் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குமாறு இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.