RTE இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய இருந்த நிலையில், 25ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சேரக்கூடிய குழந்தைகளுக்கு LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவசம்.
அதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கான ஆன்லைன் பதிவு நடந்து வருகிறது. மொத்தம் உள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் இடங்களுக்கு , நேற்று வரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர் . விண்ணப்பம் செய்வதற்கு நாளை கடைசி நாள் நாளை என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்த பிறகு கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை நிரபந்திப்பதும் நோய்த்தொற்று காலத்தில் அரசு பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்றதும் இதற்கு காரணமாக முன்வைக்கப்படுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.