விவசாயியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே மேலகோட்டையை சேர்ந்தவர் முகமது மொய்தீன் (வயது 38). விவசாயி. இவரது செல்போனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் வந்த லிங்கில் தொடர்பு கொண்டாபோது, இந்த லிங்கில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பும்படி இருந்தது. பின்னர் அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, முகமது மொய்தீன் பணம் செலுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என அதில் பேசிய நபர் கூறியுள்ளார்.
ரூ.1 லட்சம் மோசடி
இதை நம்பிய முகமது மொய்தீன் பல தவணைகளாக ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 568-ஐ இணையதளம் மூலம் அந்த நபர் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் அவருக்கு எந்த லாபமும் வரவில்லை. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது மொய்தீன் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.