கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2059 மாணவர்கள் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் மொத்தம் மாணவர்களில் 25 சதவீதம் பேர் கட்டணமின்றி சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான தொகையை அரசே செலுத்துகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 21 தனியார் பள்ளிகளில் மொத்தம் 2059 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 211 தனியார் பள்ளிகளில் சேர 3089 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 78 பள்ளிகளில் 695 மாணவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமிருந்த 133 பள்ளிகளில் குலுக்கல் முறையில் 1364 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் 211 பள்ளிகளில் 2059 மாணவர்கள் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர். 880 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.