பாதுகாப்பு அலகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கான பிரதம மந்திரி குழந்தைகள் பாதுகாப்பு திட்டமானது (PM Cares For Children) மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் 29.05.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பெற்றது.
இத்திட்டத்தின் மூலம் ரூ. 5,00,000ஃ-த்திற்கு குழந்தைகளுக்கான சுகாதார காப்பீடு திட்டமானது (Ayushman Bharat Scheme (PM-JAY)) செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால்
பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த 2 குழந்தைகளுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது (Health Insurance Card Through Post
Office). . மேலும் 2 குழந்தைகளுக்கும் பிரதமந்திரி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.7,46,030ஃ-ம் மற்றும் ரூ.5,56,550ஃ- குழந்தைகளின் அஞ்சலக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இத்தொகையானது குழந்தைகள் இருவருக்கும் 18-வயது அடையும் பொழுது தலா ரூ.10,00,000ஃ-மாக முதிர்வு பெறும். 18-வயதிலிருந்து 23-வயதை அடையும் வரை ரூ.10,00,000ஃ-த்திற்கான வட்டியினை எடுத்து 2 குழந்தைகளின் மாதாந்திர பராமரிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 23-வயதை அடைந்தபிறகு 2 குழந்தைகளுக்கும் தலா ரூ.10,00,000ஃ-ம் அவர்களது அஞ்சலக வங்கி கணக்கிலிருந்து எடுத்துகொள்ளலாம் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30.05.2022 அன்று காணொலிக்காட்சி வாயிலாக மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் குழந்தைகளிடம் உரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த 2 குழந்தைகளுக்கான அஞ்சலக கணக்குபுத்தகம், சுகாதார காப்பீட்டு அட்டை, பிரதமரின் கடிதம் மற்றும் பிரதம மந்திரியின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான
சான்றிதழ்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.