புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை தமிழக பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிற நிலையில் முதன்மை கல்வி அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.