முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருவதையொட்டி விழா நடைபெற உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தினை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழா பந்தல் அமைப்பு, பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.
ஆலோசனை
அதன்பின்னர் அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்த நிலையில் மைதானத்தில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் சேறும், சகதியுமானது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஐ.ஜி. ஆய்வு
மேலும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெறும் பகுதியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் கவிதா ராமுவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.