புதிய பேருந்து நிலையத்தை இளையான்குடியில் அமைக்க வேண்டாம் என சிவகங்கைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இளையான்குடியில் ஊருக்கு வெளியே யாருக்கும் பயன்தராத வகையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பயன்தராத வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையாங்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தைத் திறந்து வைக்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது, மக்கள் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி மனுக் கொடுத்து வலியுறுத்தினர்.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக மக்கள் நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.