கோட்டைப்பட்டனம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நாளை (ஜூன் 15) கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர் வலை உள்ளிட்ட உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணி தீவிரம்





மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதையொட்டி விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். மேலும் வலை உள்ளிட்ட உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிவு

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நாளை கடலுக்கு செல்கின்றனர்

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவுற உள்ளது. இதனை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். தங்கள் படகுகளுக்கு புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு கடலில் இறக்கி உள்ளனர். மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2 மாத காலங்களாக வெறிச்சோடி காணப்பட்ட கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளங்கள் பரபரப்பாக காணப்பட்டு களைகட்ட தொடங்கியுள்ளது. மேலும் நாளை (புதன்கிழமை) முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments