61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல கடந்த 2 நாட்களாக ஆயத்த பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடிக்க செல்வதற்கு முன்பு தங்கள் படகுகளில் எரிபொருளை நிரப்பினர்.
பின்னர் பிடித்து வரும் மீன்களை கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ் கட்டிகளை படகில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இங்கிருந்து மீன் பிடிக்க செல்லும் படகுகள் தேசியக்கொடியுடன் செல்வது வழக்கம். இதனால் பழைய தேசியக் கொடியை இறக்கி விட்டு விசைப்படகில் புதிய தேசியக்கொடியை கட்டிக்கொண்டு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க தயாராகினர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நாளை (வியாழக்கிழமை) மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.