திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை தடத்தில் ஒரே ஒரு ரெயில் மட்டும் காலையும் மாலையும் இயங்கி வருகிறது. இந்தநிலையில் தென்னக ரெயில்வே இந்த வழிதடத்தில் தொலைதூரம் செல்லும் பல்வேறு ரயில் சேவையை விரைவில் தொடங்க முடிவு செய்துள்ள நிலையில் முதல் கட்டமாக கடந்த 4-ந்தேதி முதல் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி உள்ளது. ஆனால் இந்த ரெயில் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லைஇதனால் முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டிப்பாக நிறுத்தி இயக்க வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அமைதி பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலெக்சாண்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு சார்பில் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப், துணைத்தலைவர் எம்.சி.சதிஷ்குமார், நிர்வாகிகள் மெட்ரோ மாலிக், நூருல் அமீன், அதிகாரிகள் தரப்பில் தென்னக ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பிரத்திராஜ், தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் சீனு, வருவாய்த்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
ஒத்தி வைப்பு
கூட்டத்தில், முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில், எர்ணாகுளம்- – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தம் செய்து இயக்க செல்ல தொடர்ந்து ரயில்வே போக்குவரத்து ஆய்வாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அதற்கான நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்படும்.இனிவரும் காலங்களில் வரும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தவும் ரயில்வே பயணசீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்திட வலியுறுத்தியும், ரயில் நிலையத்தை தரம் உயர்த்த உயர் அலுவலர்களிடம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்னக ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் உறுதியளித்தார். எனவே நாளை(திங்கட்கிழமை) நடைபெற்ற இருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.