கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் பலத்த மழை






கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  பலத்த மழை பெய்தது

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா  மீமிசல்  கோபாலப்பட்டிணத்தில்  பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இன்று 15 ஜூன் புதன்கிழமை இரவு 8 மணிக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த  மழை பெய்தது . சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

வெயில் உக்கிரம் குறைந்து  குளிர்ச்சியை ஏற்படுத்தியது.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments