வடக்கு புதுக்குடி மகாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம், பாய்மரப்படகு போட்டி ஆகியவை நடைபெற்றன.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் மற்றும் பாய்மரப்படகு போட்டி நடைபெற்றது. காலையில் பெரிய மாடு, சிறியமாடு ஆகிய பிரிவுகளில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயம் புதுக்குடியில் இருந்து புறப்பட்டு கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்று எல்லையை வந்தடைந்தது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. பந்தயத்தை காண சாலையின் இருபக்கமும் பொதுமக்கள் கூடி இருந்தனர்.
பாய்மரப்படகு போட்டி
இதன் தொடர்ச்சியாக கடலில் பாய்மரப்படகு போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் பல மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு சுழற்கோப்பையும், பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.