நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இம்மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு குறித்து, நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன் பங்கேற்றார். புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, செஸ் பலகை மற்றும் காயின் மாதிரி வடிவங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு, பள்ளி மைதானத்தில் ஏற்படுத்தியிருந்த செஸ் பலகை, காயின் மாதிரி வடிவங்களையும் பார்வையிட்டு பாராட்டினார். பின்னர் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.