பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கை.களத்தூர் கிராம ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வகுமார் மற்றும் 10 வார்டு உறுப்பினர்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், ஊராட்சி மன்ற தலைவர் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. செலவு செய்ததாக ஊராட்சி செயலாளரை மிரட்டி பில் போடுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாததால் காந்தி நகர், பாதாங்கி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களை தலைவரின் கணவர் தகாத வார்த்தையால் திட்டி, ஆளும் கட்சியை சேர்ந்த என்னை யாரும் ஏதுவும் செய்ய முடியாது, என்கிறார். அரசு திட்டங்களுக்கு தடையாக இருக்கிறார். அரசின் திட்டங்களுக்கு வேலை நடைபெறாமலேயே, வேலை நடைபெற்றதாக பணம் எடுக்கின்றனர். சுமார் 40 ஆதிதிராவிடர் இன மக்களுக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனை கலெக்டர் பெற்றுக்கொடுக்க வேண்டும். தலைவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டத்தை கூட்ட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தை கலெக்டரே பொறுப்பேற்று நடத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.