தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் மீது எல்.இ.டி பல்புகள் டெண்டர் விவகாரம் தொடர்பாக தி.மு.க. பகிரங்க குற்றம்சாட்டி வந்தது. அதை தொடர்ந்து தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரின் வீடுகள் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மாவட்ட அளவில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் மீது தொடக்கநிலை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தொடக்க நிலை விசாரணைக்கு கடந்த 2017-ம் ஆண்டு எல்.இ.டி. பல்புகள் வாங்குவதற்காக நடத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி சம்பந்தமான அனைத்து கோப்புகள் மற்றும் ஆவணங்களை உடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.