கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் பரவலாக மழை




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது.

 இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் இன்று ஜூலை 22 வெள்ளிக்கிழமை  பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து 7 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. 

இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments