திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நிலையில் உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, குவைத்,
இலங்கை போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் வெளி–நாட்டு சேவைகளாக இயக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர உள்நாட்டு விவாத சேவைகளாக ஐதராபாத், டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வந்த காரணத்தினால் குறைந்த அளவே விமான சேைவயை பயன்படுத்தி வந்தனர்.
கொரோனா பெருந்தொற்று உலக அளவில் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு விமான சேவைகளாக இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் அனைத்தும் தற்போது நிரந்தர சேவையாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திருச்சி விமான நிலையம் இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் பதினோராவது இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விமான நிலையங்களில் முதல் நான்கு இடங்களில் புதுடெல்லி, மும்பை, சென்னை, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் உள்ளன.
இந்த வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் 11-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் திருச்சி விமான நிலையமானது 98,591 வெளிநாட்டு பயணிகளை கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.