கோட்டைப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு....!






கோட்டைப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழந்து உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள காரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியய்யா மகன் ராமநாதன்(35) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் சுந்தர் (45). அவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வண்ணச்சப்பட்டினம் பகுதியில் தங்கி இருந்து பைபர் படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது இவர்கள் இரண்டு நாட்டில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ராமநாதன் என்பவர் கடலில் தவறி விழுந்து உள்ளார்.

உடனே உடன் சென்றவர் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். ஆனால் தவறி விழுந்த ராமநாதன் காணவில்லை. பின்னர் இது குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை எடுத்து கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் காணாமல் போன மீனவரையும் மற்றும் கடலில் படகில் இருந்த மற்றொரு மீனவரையும் தேடி கடலுக்குள் சென்றனர்.

அப்பொழுது கோட்டைப்பட்டினம் பகுதிக்கு நேராக படகு ஒன்று நின்றுள்ளது. அதில் மீனவர் சுந்தர் வந்துள்ளார். பின்னர் அவரிடம் விசாரித்தபோது மீனவர்கள் தவறி விழுந்த இடத்தை அவர் அடையாளம் காட்டினார். அந்த இடத்தில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் மீனவர்களை தேடினர்.

பின்னர் அதே இடத்தில் மீனவர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் மீனவர் உடலை கைப்பற்றிய கடலோர காவல் படையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments