புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய இடங்களிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர விரும்பும் மாணவா்கள் வரும் ஜூலை 20ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இப்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்படும் தொழிற் பிரிவுகள், இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகிய தகவல்கள் இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ வங்கிக் கணக்கு மற்றும் அட்டைகள் மூலம் செலுத்தலாம். பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், இலவச பேருந்து பயண அட்டை, வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 ஆகியவை வழங்கப்படும். ஐடிஐ வளாகத்திலேயே மாணவா் சோ்க்கைக்கான உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள கடைசி நாள் ஜூலை 20.
மேலும் விவரங்களை அறிய புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலைய தொடா்பு எண்கள் 04322- 221584, 94863 11243 (புதுக்கோட்டை), 98654 47581(விராலிமலை).
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.