சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தொடக்கம்




        புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம்சீருைட நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இப்பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மேலும் தொடர்ச்சியான இடைவெளிகளில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். இப்பணியிடத்திற்கு அதிக அளவில் இளைஞர்கள் விண்ணப்பிக்கவும், மேலும் விண்ணப்பித்த இளைஞர்கள் இலவச நேரடி பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள தங்களின் விவரத்தினை decgcpdkt.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டோ பயன்பெறலாம் என கலெக்டா் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments