அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஆவுடையார்கோவில் அருகே உள்ள பரமந்தூரில் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி மணல் குவாரி அமைத்து தரப்படும் என கோட்டாட்சியரிடம் தொலைபேசி வாயிலாக கனிமவளத்துறை அதிகாரி அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
மணல் அள்ளுவார்கள்
மேலும் அறந்தாங்கி, மணமேல்குடி பகுதிகளிலும் மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் செப்டம்பர் 6-ந் தேதி அறந்தாங்கி மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளில் தன்னிச்சையாக மாட்டுவண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்கள் மணல் அள்ளுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.