புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ரூ. 3 முதல் குறைந்த விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ள சிறுநூல்கள் மாணவ வாசகா்களை வெகுவாகக் கவா்ந்துள்ளது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் 67 பதிப்பகங்களின் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா புத்தகத் திருவிழாக்களிலும் குறிப்பிடும்படியான விற்பனையாகும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடங்கி, ஏராளமான ஆங்கிலப் புத்தகங்களும் லட்சக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிறுநூல் வரிசை எப்போதும் குறிப்பிடத்தக்க விற்பனையைக் காணும். இதன்படி, தற்போது நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், விவேகானந்தரைப் பற்றிய பாக்கெட் அளவிலான சிறுநூல் வெறும் ரூ. 3-க்கு ராமகிருஷ்ண மடம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவற்றுடன் பெரும்பாலான பதிப்பகங்களின் அரங்குகளில், ரூ. 10 மற்றும் ரூ. 12-க்கான சிறுநூல்கள் ஏராளம் குவிக்கப்பட்டுள்ளன. பெரியாா், அம்பேத்கா், பாரதி, பாரதிதாசன், விவேகானந்தா், வ.உ.சி., காந்தியடிகள், மாா்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், பகத்சிங், நேதாஜி, வேலுநாச்சியாா், சுப்பிரமணிய சிவா, திருப்பூா் குமரன், பூலித்தேவன், கட்டபொம்மன், அன்னை தெரசா, மு. கருணாநிதி, காமராஜா், கக்கன் உள்ளிட்ட தலைவா்களின் வரலாற்று சிறுநூல்களும், அனைத்து வகையான சமையல் குறிப்புகள், விளையாட்டுகளைப் பற்றிய நூல்கள், சுற்றுலா பற்றிய நூல்கள், கோயில்கள் மற்றும் கடவுள்களைப் பற்றிய நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.
தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவா்கள் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வரப்படும் நிலையில் அவா்களுக்கு எளிதாக வாங்கிச் செல்லும் வகையில் இந்த சிறுநூல்கள் அமைந்திருக்கின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.