புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே முதல் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.
இலுப்பூா் அருகே விட்டாநிலைப்பட்டியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி (45). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மதலை அம்மாள் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வேளாங்கண்ணி தனது முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளாா். இது மதலை அம்மாளுக்கு தெரிய வரவே தனது கணவருடன் அவா் கடந்த 2021 ஜூலை 31ஆம் தேதி சண்டையிட்டுள்ளாா். இதில் கோபமடைந்த வேளாங்கண்ணி, மதலை அம்மாள் மீது மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துள்ளாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். இதனைத் தொடா்ந்து இலுப்பூா் போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து வேளாங்கண்ணியைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் பா. வெங்கடேசன் ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஏ. அப்துல் காதா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
குற்றவாளி வேளாங்கண்ணிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 5 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவா் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.