கேரளாவில் நெகிழ்ச்சி..! பழைய புத்தகத்தில் இருந்த ரூ.4 ஆயிரத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு உரியவரிடம் ஒப்படைத்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அல்லாப்பிச்சை-க்கு கேரளா ஊடகங்களில் பாராட்டு மழை!



கேரளாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரூ.4 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த தமிழகத்தை சேர்ந்த தள்ளுவண்டியில் வோ்க்கடலை வறுத்து விற்பனை செய்யும் தொழிலாளியான அல்லாபிச்சையை கேரளா மக்கள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருகிறது.
 
கேரளா மாநிலம் கல்லாறு ஜம்ஷானியில் தங்கி புத்தூர் நகர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தள்ளுவண்டியில் வோ்க்கடலை வறுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அல்லாபிச்சை. இவர் வேர்க்கடலையை மடித்து கொடுப்பதற்காக பழைய புத்தகங்கள் மற்றும் வார இதழ்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில் எஸ்.என்.புரம் ஏ.ஆர்.பவனில் வசித்து வரும் சசிகுமாரிடம் வேர்க்கடலை விற்பனைக்காக ஏற்ற பழைய புத்தகங்கள் மற்றும் வார இதழ்களை வாங்கியுள்ளார். 
கல்லாறு ஜம்ஷானியில் உள்ள வாடகை வீட்டை அடைந்த அல்லாபிச்சை புத்தகத்தை திறந்து பார்த்தபோது, ​​புத்தகம் ஒன்றில் பணம் ரூபாய்.4 ஆயிரம் இருந்தது. உடனே சசிகுமாரை தேடிச்சென்று பணத்தை கொடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சசிக்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து சுமார் ஒன்றரை வருடங்கள் தேடலுக்கு பின் சசிகுமார்ரை கண்டு பணத்தை திருப்பி அளித்தார். பழைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த ரூபாய்.4 ஆயிரம் பணத்தை அல்லாப்பிச்சை குடும்பத்தாரிடம் திருப்பிக் கொடுத்தது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் கேரளா ஊடகங்களில் கோட்டைபட்டினத்தை சேர்ந்த தள்ளுவண்டியில் வோ்க்கடலை வறுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் அல்லாப்பிச்சைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments