நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் வழக்கமாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்வார். அதன்பின் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு நற்சான்றிதழ்களை வழங்கிய பின் விழா முடிவடையும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
கலை நிகழ்ச்சிகள்
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் சுதந்திர தின விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் மற்றும் பணிகள் அதிகாரிகள் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளோடு சுதந்திர தின விழாவை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.