புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்த விபத்தில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. தேர் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தார்.
தேர் விபத்து தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேர் விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம் என பக்தர்கள் தரப்பிலும், பா.ஜ.க.வினரும் கூறி வந்தனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சந்திரசேகரன் கூடுதல் பொறுப்பாக பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் பணியை கவனிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் அடுத்த வாரம் புதுக்கோட்டை வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த விசாரணைக்கு பிறகு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.