கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டிணம் பகுதியில் 10 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்



        விசைப்படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.

கடந்த 3-ந் தேதி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வள துறையால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 10 நாட்கள் நீடித்தது.

மீனவர்கள் மகிழ்ச்சி

இந்தநிலையில் இப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க உள்ளனர்.

இதனால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments