விசைப்படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.
கடந்த 3-ந் தேதி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வள துறையால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 10 நாட்கள் நீடித்தது.
மீனவர்கள் மகிழ்ச்சி
இந்தநிலையில் இப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க உள்ளனர்.
இதனால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.