புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் 35 ஊராட்சிகள் உள்ளது. நாட்டாணிபுரசக்குடி ஊராட்சில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் துவங்கியது. தேசியக்கொடியை ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி ஏற்றி வைத்தார். பின்பு ஊராட்சி எழுத்தர் ஸ்டெல்லா பஞ்சாயத்தில் உள்ள தீர்மானம் சம்பந்தமான அறிக்கையை மக்கள் மத்தியில் வாசித்தார். இதில் ஊராட்சியில் தூய்மை குடிநீர், சாலை அமைத்தல், குளம் குட்டைகள் மராமத்து, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி சம்பந்தமாக பஞ்சாயத்தில் ஏற்றக்கூடிய தீர்மானங்களை முன் வைத்தார். பிறகு மக்கள் மத்தியில் தீர்மானம் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக கோபாலப்பட்டிணத்திற்கு குப்பை கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும், அனைத்து சாலைகளும் செப்பனிட வேண்டும் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆவுடையார்கோவில் சேர்மன் உமாதேவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தர பாண்டியன், செந்தில் குமரன் மற்றும் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீமிசல் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.